அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லையானது ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.