குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்

குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள் | Good News For Sl Peoples Coconut Prices Down

நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தேங்காய் விலை குறைவடைந்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர்.

குறிப்பாக கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை 220 முதல் 250 ரூபாய் வரையில் காணப்பட்ட  நிலையில் தற்போது அது 130 தொடக்கம் 185 ரூபாய் வரையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக நாட்டில் ஒரு தேங்காயின் விலை 200க்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது தேங்காய் விலை குறைவடைந்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டில் , தோராயமாக 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி முயற்சியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் கப்பல் ஒன்று கடந்த 03ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

உறைந்த தேங்காய் பால், தேங்காய் பால் பவுடர் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த தொகுதி  200 மில்லியன் தேங்காய்களுக்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டதுடன் இது சுங்க அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button