சிறி லங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு

சிறி லங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு | Special Announcement For Sri Lankan Airlines

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வணிக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகி வருகின்றமை அல்லது திருப்பி விடப்படுகின்றமை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button