தென்னை செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு : வெளியான அறிவிப்பு

தென்னையில் இலை வாடல் மற்றும் அழுகல் நோயை’ கட்டுப்படுத்த மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோயுற்ற தென்னை மரங்களை வெட்டுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ. 3,000 லிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் பரவியுள்ள இந்த நோய், அந்த மாகாணத்தில் உள்ள தென்னந் தோட்டங்களில் இன்னும் இருந்தால், தென்னை விவசாயிகள் நோயுற்ற மரங்களை வெட்ட வேண்டும் என்று தென்னை அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button