யாழ் – கொழும்பு தொடருந்து சேவை : வெளியான புதிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பிற்கான (Colombo) தொடருந்து சேவை குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடக்கு தொடருந்து பாதையில் இயங்கும் இரண்டு சொகுசு எக்ஸ்பிரஸ் தொடருந்துகள் இன்று (10) முதல் மீண்டும் கல்கிஸை தொடருந்து நிலையத்தில் புறப்பட்டு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே (N.J. Indipolage) தெரிவித்துள்ளார்.
அத்துடன் வார இறுதியில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்து எண் 4021, கல்கிஸை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் தொடருந்து எண் 4022, கல்கிஸை தொடருந்து நிலையத்திலிருந்து இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, தொடருந்து கல்கிஸையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என்றும் தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.