வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் நிலவிய வாகனங்களுக்கான அதிக கேள்வி நீங்குவதுடன் வாகனங்களின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், சுமார் 58,947 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த காலப்பகுதியில் 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் நடந்ததாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button