ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 40% வருமான அதிகரிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் நேற்றைய தினம் வருமானம் சுமார் 40% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22ஆம் திகதி 140,791 வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணித்ததாகவும் இதன் மூலம் சுமார் 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கிடைத்துள்ளது.

அத்தோடு, கடந்த 23ஆம் திகதி சுமார் 145,503 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் இதன் வருமானம் சுமார் 50,174,550 ரூபாவாகும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பிரகாரம், 23ஆம் திகதி பெறப்பட்ட வருமானமே இதுவரை நெடுஞ்சாலையில் பெறப்பட்ட அதிகூடிய வருமானமாக கருதப்படுகிறது.

அதேவேளை, இது ஒரு சாதாரண நாளின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 40% அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button