இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்!

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம் : 15 நாட்களில் 5,000 நோயாளர்கள் பதிவு | 5 Thousand Dengue Patients In 15 Days In Srilanka

இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது (5,029) டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிகளவான நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிரவும், நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை இன்று (16) வெளியிடப்படலாம் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button