நாட்டை சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சஜித் வலியுறுத்து

அரசு நாட்டைச் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று (24.01.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியல் கட்டளை 27 (2) இன் கீழ் அரசிடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button