வாக்குகளுக்காக இலஞ்சம் பெறுவோருக்கு வரப்போகும் ஆபத்து!

வாக்குகளுக்காக இலஞ்சம் பெறுவோருக்கு வரப்போகும் ஆபத்து! | Electoral Bribery Fine Raised To Rs 100 000

தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக இலஞ்சம் பெறுவோருக்கு எதிரான அபராத தொகையினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் பெற்ற குற்றம் உரிய ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையினை 100,000 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கான அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்துள்ளது.

இந்நிலையில் தற்போது, வாக்குகளைப் பெறுவதற்காக இலஞ்சம் பெறுவோருக்கு எதிரான அபராதத் தொகை 500 ரூபாயிலிருந்து 100,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டில் (2024) நாட்டில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பாக புதிய விதிமுறைகளும் சட்டங்களில் திருத்தங்களும் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டவண்ணம் உள்ளது.

அந்த வகையில் இவ்வாண்டு (2024) அதிபர் தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button