கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Announcement For Sri Lankans Going To Canada

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் சந்தேகநபராக இலங்கையை சேர்ந்த இளைஞரொருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையர்கள் அதிகளவில் புலம்பெயரும் நாடுகளில் ஒன்றான கனடா இந்த கொலை சம்பவம் காரணமாக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு ஏதேனும் தடை ஏற்படுத்தப்படுமா என ஊடகமொன்று வினவிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது.

கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களையும் வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button