தேர்தல் நடவடிக்கை ஆரம்பம்.! பெரமுன கட்சியின் நிபந்தனை முன்வைப்பு!

ரணிலுக்கு மொட்டு முன்வைத்துள்ள நிபந்தனை | Peramuna Sets Conditions For The President

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இணைத்து கொள்ளுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் அதிபர் ரணிலுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.

அவ்வாறு இணைத்து கொள்ள முடியாத பட்சத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் ஒருவரை முன்வைக்கும் என்றும் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலருடன் கடந்த வாரம் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்குமாறு அந்த கட்சியின் தலைமைக்கு அடிமட்ட மட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஆரம்பம் முதலே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று அரசுடன் சேர்வதை மேலும் தாமதப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button