பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு | Application Period For Universities

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன்(5) நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) அறிவித்துள்ளது.

இதற்கமைய, உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலையில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button