பொதுத் தேர்தலில் நாமல் போட்டியிடுவது குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் நாமல் போட்டியிடுவது குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிவிப்பு | Namal Rajapakse Will Contest In Hambantota

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை பொதுஜன முன்னணி மறுத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே இம்முறையும் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே ​நேரம் பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீ்ர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில் , நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் அக்கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

எனினும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அந்தந்த மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படவில்லை என்றும் பொதுஜன பெரமுண அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button