லண்டன் – கொழும்பு விமான சேவை: சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்த தீர்மானம்.

லண்டன் - கொழும்பு விமான சேவை: சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்த தீர்மானம் | Srilankan Airlines Change On London Colombo Route

லண்டனுக்கும் (London) கொழும்புக்கும் (Colombo) இடையிலான விமானப் பாதையை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறி லங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாக பயணிக்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தீர்மானத்தினால் அந்த விமான பயணத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும் என சிறி லங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விமானத்திற்கான எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button