குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு | New Aswesuma Payment Scheme For Sri Lanka Peoples

அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நலன்புரி நன்மைகள் சபையினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி, சிரேஷ்ட பிரஜைகளின் அஸ்வெசும ரூ.3000 கொடுப்பனவானது, குடும்பத்தினரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவானது, இம்மாதம் முதல் குடும்பத்தினரின் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button