பல்கலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் மானியங்கள் சுமார் 4 மாதங்களாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ரூ.7,500 மாதாந்திர கொடுப்பனவு தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு போதுமானதாக இல்லை என்றும்,பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அதை ரூ.10,000 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் முன்னாள் இயக்குநர் பராக்கிரம பண்டார தெரிவிக்கையில், தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் ஆண்டுதோறும் ரூ. 1.8 பில்லியன் செலவாகும் என்றும், அதை ரூ. 7,500 ஆக உயர்த்தினால் வருடத்திற்கு 2 முதல் 3 பில்லியன் வரை செலவிடப்படும்.

மஹாபொல கொடுப்பனவுகளை ரூ.10,000 ஆக அதிகரிப்பதற்கும் ஒப்புதல் அளித்த போதிலும், அந்தத் தொகையை வழங்க திறைசேரியிடம் தற்போது போதுமான நிதி இல்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button