லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டின் மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சுடன் (Ministry of Finance) நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கலந்துரையாடலுக்குப் பிறகு புதிய விலை திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி திருத்தப்படுகின்றன.

இந்த நிலையில் வரவிருக்கும் விலை திருத்தத்திற்கான பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த திட்டமிடப்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக லிட்ரோ எரிவாயு அதன் விலைகளை திருத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button