அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவை முன்கூட்டியே கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பொன்றை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
குறித்த அமைப்பு நாட்டின் ஐந்து இடங்களில், முதன்மையாக கடற்படை தளங்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் நடைமுறையாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடடுன்ன தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புகள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணு மின் நிலையங்களில் இயற்கை அல்லது செயற்கை விபத்துக்கள் காரணமாக இலங்கைக்குள் நுழையக்கூடிய கதிர்வீச்சைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்பிட்டி, மன்னார், டெல்ஃப்ட், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.