வவுனியாவில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் உக்குளாங்குளம் கிராமத்தில் 3 ஆவது டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவ் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஜனவரி முதல் வாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அடையாளம் காணப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் வீட்டிற்கு சுகாதார பரிசோதகர்கள் சென்று டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என்பது தொடர்பாக அவதானம் செலுத்தவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button