விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கி வைப்பு.

ஒரு ஹெக்ரெயருக்கு உட்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யும் 9486 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 பெரும்போகத்தில் 21864 விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 23 ஆயிரத்து 369 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக விவசாயிகளுக்கான உதவித்தொகையாக ஒரு ஹெக்ரெயருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட இருக்கின்றது. இதன்படி 9486 விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகை திங்கள் கிழமை முதல் வங்கியில் வைப்பு செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக ஒரு ஹெக்ரெயருக்கு மேல் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button