நீர்க் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வின் அடிப்படையில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்விற்கு நிகரான நீர் விநியோக செலவுகள் உயர்வடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வினால் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னர் கட்டண அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button