மின் கட்டண அதிகரிப்பால் அதிகரிக்கப்படும் மற்றுமொரு கட்டணம்..!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்களில் (சலூன்களில்) முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சில சிகை அலங்கார நிலையங்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகை அலங்கார நிலையங்களில் முடி வெட்டுவதற்கு மாத்திரம் 500 ரூபாவாக  மாற்றப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்கான கட்டணமும் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button