உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இடம்பெறவுள்ளது முக்கிய கலந்துரையாடல்!

உள்ளூராட்சி தேர்தல் திகதி பிற்போடப்பட்டமை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்துவது தொடர்பில் எதிர்கொண்டுள்ள தடைகள் குறித்து ஆராய்வதற்கே இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி  அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இடம்பெறவுள்ளது முக்கிய கலந்துரையாடல்! | Election Commission Meeting Local Election Meeting

இந்நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டும் வகையிலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button