தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம்!

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம்! | Local Gov Election Political Crises In Sri Lanka

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் பல தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு குறித்த குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற விவகாரக் குழுவிடம் குறித்த இரண்டு நாள் விவாதத்தை கோரியிருந்தார்.

அதேசமயம், பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button