வாகன விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையிலும் புதிய வாகங்களை இறக்குமதி செய்ய முடியாதவாறு தடை இன்னும் தொடர்வதால், பயன்படுத்திய வாகனங்களே சந்தையில் சுழற்சியில் உள்ளன.

எனவே தற்போது பயன்படுத்திய வாகனங்களின் விலையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button