இருளில் மூழ்குமா இலங்கை … மின்சார சபை பொறியியலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இருளில் மூழ்குமா இலங்கை ... மின்சார சபை பொறியியலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning From Electricity Engineers

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று முதல் எதிர்வரும் (14) 7 நாட்களுக்கு நேரத்திற்கு பணிக்கு சமுகமளித்தல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த காலத்திற்குள் அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறினால், எதிர்கால நடவடிக்கை குறித்து மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பல அத்தியாவசிய சேவைத் துறைகளின் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ள பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்காக சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பிக்கவும், நாளைய தினம் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் திட்டமிட்ட மின்வெட்டு இருக்காது என்று கூறிய அதிகாரி, இதனால் மின் தடையை சீரமைப்பது தாமதமாகும் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button