உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்..! | Local Government Election Date

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் ஒரு மாத கால இடைவெளியில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படாமையினால் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தேர்தல் ஒத்தி வைப்பு குறித்து இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button