இலங்கையிலிருந்து வெளியேறப்போகும் மூன்று இலட்சம் பேர்

இலங்கையிலிருந்து வெளியேறப்போகும் மூன்று இலட்சம் பேர் | Three Lakh People Are Going To Leave Sri Lanka

இந்த வருடத்தில் மூன்று இலட்சம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.எனவே இந்த வருடத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்சார் திறன் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளுக்கு பணியாளர்களை பரிந்துரைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button