வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் – நீக்கப்படுகிறது கியூஆர் முறை…!

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் - நீக்கப்படுகிறது கியூஆர் முறை...! | Qr System Is Being Removed

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதனால் உருவான எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் கியூஆர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தால் வாடகை வாகனங்களை வைத்திருப்போர் தமக்குரிய எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தெரிவித்து வந்த நிலையில் அவர்களுக்கான ஒதுக்கீட்டில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டது.

எனினும் கியூஆர் முறையால் போதியளவு வருமானத்தை ஈட்ட முடியவில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து அடுத்தமாதம் பரிசீலிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கியூஆர் முறையை நீக்காவிடின் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button