நுகர்வோர் வழங்கும் முறைப்பாடுகளை கையாள்வதற்கான புதிய செயன்முறை!

நுகர்வோர் வழங்கும் முறைப்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கான புதிய செயல்முறையொன்று இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், பொருள் ஒன்றை கொள்வனவு செய்யும்போது நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது குறித்த முறைப்பாட்டை முறைப்பாட்டு சபைக்கு முன்வைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, சட்ட உதவி ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button