க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு | Gce Advance Level Examination 2023

இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (03) அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதியினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சென்ற மாதம் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் திட்டமிடப்பட்ட திகதியினை ஒத்திவைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்திருந்தார்.

அப்போது, மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில் பரீட்சைகளுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இன்று குறித்த அறிவிப்பை அமைச்சர் நாடாளுமன்றில் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button