உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலை: விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலை: விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | Regulatory Price Imposed On Fertilizers

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே குறித்த நடவடிக்கை எடுக்க காரணம் என அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல்வேறு விலைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி உர விற்பனை தொடர்பாக முறையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின்னர் உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button