மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (03) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழை அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button