காலநிலை பல்கலைக்கழகம் குறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்!
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.