தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்! | Dengue Zones Up To 44

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவானது பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், நாட்டில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன,

“வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button