புலமைப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் !
தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்காக 33, 7591 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றியிருந்ததோடு சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றது.
இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அடுத்த வாரமளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.