ரணில் விக்ரமசிங்கவின் புதிய நியமனங்கள் !

இலங்கையில் நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

நலன்புரி நன்மைகள் சபை
இதேவேளை, இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பிரதேச செயலாளர்களும் பிரதி நலன்புரி ஆணையாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட மேலதிக மற்றும் பிரதி நலன்புரி ஆணையாளர்களுக்கான பணிகளை நலன்புரி நன்மைகள் சபை ஒதுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் விதிகளின்படி, மேற்படி சட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button