கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி | Broken Computer Structure In Katunayake

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் இன்று (26.11.2023) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பு பணிகள் செயலிழந்துள்ளன.

இதனால் வெளிநாடு செல்ல காத்திருந்த பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் செயலிழந்த கணினி கட்டமைப்பு தற்சமயம் திருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button