மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் – 40 தொழிற்சங்கங்கள் தயார்!

இந்த வார இறுதிக்குள் வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நாற்பது தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கி ஊழியர்கள் இணைந்த, அனைத்து சேவைகளையும் சேர்ந்தவர்கள் குறித்த கூட்டணியில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

அதேசமயம், வேலை நிறுத்தத்தின் மூலமாக மாத்திரமே கோரிக்கைகளை வெல்லமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ள திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

வரிக் கொள்கையை மாற்றப்போவதில்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறிய விடயம் தற்போது தொழிற்சங்கத்தினரிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button