திட்டமிட்டப்படி உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன, அதில் வழக்கு எண். SC/ FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு எண். SC/ FR/254/2023 மனுதாரர்களால் மீளபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button