நடிகை ஓவியா எடுத்த அதிர்ச்சி முடிவு!

தமிழ்த் திரையுலகில் களவாணி திரைப்படத்தின் மூலம் நடிகை ஓவியா அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, என்ற வெற்றி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதேவேளை, ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே ரசிகர்கள் ஓவியா ஆர்மியை தொடங்கினார்கள்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் அதற்க்கு பின் நடித்த 90ml உள்ளிட்ட படங்கள் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு பிறகு ஓவியா அதிகம் படங்களில் நடிப்பதில்லை.

ஓவியா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்களில் பதிலளித்து வருகிறார்.

இன்று அவர் ரசிகர்கள் உடன் பேசும்போது ‘திருமணம் எப்போ’ என ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன ஓவியா, “நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிரை எடுக்குறீங்க” என கோபமாக கேட்டிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button