மற்றுமொரு கட்டண உயர்வு! ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி

மற்றுமொரு கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு கட்டண உயர்வு! ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி | Another Fare Hike A Special Gazette Was Published

இந்த நிலையில், ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும்.

மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணம்  15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 10,000 ரூபாவில் இருந்து தற்போது 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியின் உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தாமதக் கட்டணம் 10,000 ரூபாவாகவும்,  உரிமம் காலாவதியான 31 தொடக்கம் 90 நாட்களில் 25,000 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 90  நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000  ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button