நேருக்கு நேர் மோதுண்ட பேருந்துகள் – நால்வர் காயம்

கினிகத்தேன – பெரகஹமுல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு இ.போ.ச பேருந்துகளும், தனியார் பேருந்தொன்றும் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் நேருக்கு நேர் மோதுண்டதில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வேளையில், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது எதிர் திசையில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மோதுண்டுள்ளது.

விபத்து தொடர்பில் இ.போ.ச பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button