மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Notification Issued By Central Bank Governor

இலங்கை மத்திய வங்கியோ அல்லது நிதியமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுபோன்ற விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடும் அரசியல்வாதிகள் குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும்.

சமூகத்தின் சமீபத்திய கருத்து என்னவென்றால், நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை அரசியலமைப்பை மீறியுள்ளன.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை அரசியலமைப்பை மீறினால், எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. அத்தகைய நடவடிக்கைகளுக்கு என்னுடைய ஆதரவும் பங்களிப்பு செய்யும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button