இலங்கையின் கடன் தொடர்பில் சீனாவின் முக்கிய தீர்மானம்.

இலங்கை பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நீட்டிக்கும் திட்டத்தை சீனா முன்வைத்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கையினால் வங்கிக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button