இலங்கை ஆடைகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்

மின் கட்டண உயர்வால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தினை 66 வீதம் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் இவ்வாறு ஆடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 20 சதவீதம் வரை ஆடைகளின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும் அதிகாரவர்க்கத்தையே குற்றம் சுமத்த வேண்டும் எனவும் ஆடை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button