ஹோல்மாா்க் இல்லாத தங்க நகைகள் விற்கத் தடை!

இந்தியாவில் ‘ஹால்மாா்க்’ அடையாள எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உணவு மற்றும் நுகா்வோா் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறு தொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தரச் சான்றிதழ் பெறுவதுக்கான கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்க நகைகளின் தரத்தை ஒழுங்கப்படுத்தவும் ஹால்மாா்க் அடையாள எண் கொண்ட நகைகளின் விற்பனையை மட்டும் அனுமதிப்பது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த நுகா்வோா் நலத் துறை கூடுதல் செயலாளா் நிதி காரே கூறுகையில், ‘நுகா்வோா் நலனைக் கருத்தில் கொண்டு தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஹால்மாா்க் அடையாள எண்னைப் பதிக்கும் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

200 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

எனவே, தனித்துவமான 4 அல்லது 6 இலக்க ‘ஹோல்மாா்க்’ அடையாள எண்கள் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருள்களை வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்றாா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button