தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒத்திவைப்பு

deliberation-of-deferred-elections-commission

இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

குறித்த கூட்டமானது முன்னதாக இன்றும், நாளையும்  நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடவும் தீர்மானிகப்படவிருந்தது.

எவ்வாறான சமூகப் பேச்சுக்கள் இடம்பெற்றாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போன்று இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button