அவசர மருந்து கொள்வனவு குறித்த விசேட அறிவித்தல்

அவசர மருந்து கொள்வனவு குறித்த விசேட அறிவித்தல் | Special Notification Emergency Medicine Keheliya

எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரமே, அவசர கொள்வனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் குறைபாடுகள் குறித்தும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்குள் இருந்த பிரச்சினைகள் தற்போது முற்றாக தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button